நடிகர் பாலா கடந்த 2003 ம் ஆண்டு 'அன்பு' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பின் 'காதல் கிசு கிசு' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைத்துறையிலும் நடித்து வருபவர் பாலா. படங்களுக்கு பெரிதளவு மக்களிடமிருந்து வரவேற்பு வரவில்லை என்றாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இதனிடையே தனது சகோதரரும் இயக்குனருமான சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014 ம் ஆண்டு வெளியான வீரம் படத்தில் அஜித் குமார் அவர்களின் 3 தம்பிகளில் ஒருவராக நடித்து மக்களிடம் மீண்டும் பரிச்சையமானார். அதன்பின் தொடர்ந்து சில படங்களில் நடித்த வந்த பாலாவிற்கு சமீபத்தில் உணவு உட்கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டது பின் மருத்துவரிடம் பரிசோதனை பெற்றார்.‌ அதில் அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று சிகிச்சூ செய்ய அறிவுறுத்தியிருந்தனர். இதனையடுத்து அந்த சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும்‌ மற்றபடி அவர் நலமாக இருப்பதாகவும் தயாரிப்பாளர் பாதுஷா தெரிவித்திருந்தார். சமீப காலமாக அவரது உடல்நலம் குறித்து பல வதந்திகள் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரசிகர்கள் நடிகர் பாலாவின் உடல்நலம் குறித்து வருத்தமடைந்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் பாலாவின் மனைவி எலிசபெத் தனது முகநூல் பக்கத்தில் தனது கணவர் பாலாவின் உடல்நலம் குறித்து,

"கொச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பாலா சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவிக்குமாறு கூறினார். கடந்த சில ஆண்டுகளிலும் இது போன்று நிகழ்ந்தது உண்டு. அப்போதெல்லாம் அவர் வலிமையான மனிதராய் திரும்ப வந்ததுண்டு. இந்த முறையும் அதுபோல் அவர் மீண்டும் வருவார். அதனால் அவர் உடல் நலம் குறித்த வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.. அவர் உடல்நலம் குறித்த பிராத்தனைகள் தொடரட்டும்." என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் ஆச்வாசமடைந்து பாலா பூரண குணமடைய பிராத்தனைகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலாவின் மனைவி கொடுத்த இந்த தகவல் பாலா உடல்நலம் குறித்த தவறான வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.