தமிழ் சினிமாவை இந்திய ரசிகர்கள் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டம் என்றாலே அவர் தான் உதாரணம் என்ற வகையில் 90 களிலிருந்து இன்று வரை வித்யாசமான கதைக்களத்தில் பிரம்மாண்டத்தை புகுத்தி ஒவ்வொரு முறையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் இயக்குனர் ஷங்கர். ரஜினி, கமல், விஜய் என்று முன்னணி நட்சத்திரங்களின் திரைப்பயணத்தில் மைல்கல் திரைப்படங்களை கொடுத்தவர். பல கோடி முதலீட்டில் பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து இமாலய வசூலை கொடுக்க தொடங்கிய இயக்குனர் இவர்.

தற்போது ஷங்கர் உலகநாயகன் கமல் ஹாசன் வைத்து 1996 ல் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படமான இந்தியன் திரைப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்கி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பல பிரச்சனைகளுடன் இந்த திரைப்படம் நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 ம் பாகத்தில் அனிரூத் இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால். பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. கமல் ஹாசனின் முந்தைய திரைப்படம் ‘விக்ரம்இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற பின் கமல் ஹாசன் இந்த படத்திற்கு அதிகம் நேரத்தை செலவிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி பகுதிகளில் இந்தியன் 2 படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்கு கமல் ஹாசன் தனி ஹெலிகாப்டர் மூலம் பறந்து அந்த காட்சிகளை முடித்து கொடுத்துள்ளார்.மேலும் சில காட்சிகள் வரும் காலங்களில் படமாக்கப்படவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதே நேரத்தில் இந்தியன் 2 பாகம் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் இயக்குனர் ஷங்கர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிப்பில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகினார். அப்படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம் உள்ளிடோர் பலர் நடிக்கவிருக்கின்றனர். மேலும் இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்றது. பூஜையை தொடர்ந்து R15 படப்பிடிப்பை தொடங்கினார் இயக்குனர் சங்கர். ஒருபுறம் இந்தியன் 2 படம் பாதியில் நிற்க மறுபுறம் R15 படத்தை தொடங்கினார் இயக்குனர் சங்கர். இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் சர்ச்சைகளுக்கு அசராமல் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் படமாக்க முடிவு செய்தார் இயக்குனர் சங்கர். அதன்படி இரண்டு படங்களின் ஷெட்டியுல்களை நேர்த்தியாக பிரித்து படபிடிப்பில் மும்முரம் காட்டி வருகிறார்.

Commencing the next schedule of #RC15 at the iconic Charminar pic.twitter.com/uubP5P0aV1

— Shankar Shanmugham (@shankarshanmugh) February 9, 2023

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியன் படப்பிடிப்பில் இருந்த இயக்குனர் ஷங்கர் தற்போது ஹைதராபாத் சார்மினாரில் RC15 படத்திற்காக இணைந்துள்ளார்.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருவது குறித்து பாராட்டுகளையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.