சம கால தமிழ் சினிமாவில் இளைஞர்களை தங்கள் கூட்டணியில் கவர்ந்த இருவர் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரே நேரத்தில் வெற்றியை ருசித்த இந்த கூட்டணி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். அதன்படி அட்டகத்தி. மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, பரியேரும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய திரைப்படங்கள் அதில் வரும் காட்சிகள், பின்னணி இசை பாடல்கள் இன்றும் ரசிகர்களிடையே புத்துணர்ச்சியுடன் இருந்து வருகிறது. இந்த கூட்டணியில் உருவான படங்கள் பாடல்களினால் தான் இன்று இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞர்களாக இருந்து வருகின்றனர்,

சமீபத்தில் வெளிநாட்டு இதழில் ‘என்ஜாய் என்சாமி’ பாடல் அங்கீகராத்திற்கு அந்த இதழின் அட்டைப் படத்தில் இடம் பெறாத பாடலாசிரியர் பாடகர் அறிவு புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் கருத்துகளை தெரிவிப்பதில் இரு துருவங்களாக பிரிந்த வெற்றி கூட்டணி சந்தோஷ் நாராயணன் பா ரஞ்சித் பின் அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைக்காமல் இருந்தனர். பின் பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு தென்மா அட்டகாசமாக இசையமைத்திருந்தாலும் ரசிகர்கள் சந்தோஷ் நாரயணனுடனான கூட்டணியை எதிர்பார்த்தே இருந்தது. அதன்பின் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்திலும் இந்த கூட்டணி அமையாமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அளித்தது. தற்போது தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2021 ல் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தசார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கவுள்ளதாக முன்னதாக அறிவித்தார். இதையடுத்து உற்சாகத்தில் ரசிகர்கள் அதனை பெருமளவு வரவேற்றனர். இந்த படத்திலும் ரசிகர்கள் மத்தியில் எழுந்த பெரும் கேள்வி இசையைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைவாரா?/ என்பது தான்.

காரணம் முதல் பாகத்தில் அட்டகாசமான பாடல்களை சந்தோஷ் நாராயணன் கொடுத்திருப்பார். இதனிடையே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் அறிவிப்பை பகிர்ந்து அதனுடன் வானம் விடிஞ்சிடுச்சு காசுடா மேளத்தை” என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்வு மீண்டும் இந்த கூட்டணி இணையும் என்று ரசிகர்களிடையே நம்பிக்கையை வளர்த்தது.

இந்நிலையில் பா ரஞ்சித் அவர்கள் சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாள் மாதத்தை கொண்டாடும் வகையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் தமிழகத்தில் பல நிகழ்சிகளை வரலாறு சார்ந்தும் கலை சார்ந்தும் நடத்தவுள்ளனர். அதில் ஒருபங்காக திரைப்படம் திரையிடல் ‘பி கே ரோசி திரைப்பட விழா’ என்ற பெயரில் இன்று தொடங்கினர். மூன்று நாள் நடக்கும் இந்த விழாவில் பல படங்கள் திரையிடவுள்ளனர். இந்த நிகழ்வையடுத்து பா ரஞ்சித் பத்திரிககையாளரை சந்தித்து நிகழ்வு குறித்து பேசினார். அதில் சந்தோஷ் நாராயணன் சார்பட்ட பரம்பரை 2 படத்தில் இணைவாரா என்ற கேள்விக்கு,

"சார்பட்ட பரம்பரை படம் கதை வேலையில் தான் இருக்கின்றது. இப்போதான் துவங்கியிருக்கின்றோம்.சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைப்பாரா என்பது எனக்கு இப்போதைக்கு தெரியவில்லை. பார்போம்..” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இதனை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.