தமிழ் சினிமாவில் முதல் படத்திலே மிகப்பெரிய அளவு கவனம் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேரும் பெருமாள் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து மாரி செல்வராஜ் அவர்களை கவனிக்க தக்க இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது. இப்படத்தையடுத்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் அவர்களுடன் கூட்டணி அமைத்து சமூதாய பிரச்சனையை அழுத்தமாக பேசும் ‘கர்ணன்’ திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். நினைத்த அளவு திரைப்படம் விமர்சனம் அடிப்படையில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் உலகளவில் 100 கோடி வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பின் கீழ் சியான் விக்ரம் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் அவர்களை வைத்து ஒரு கபடி கதைக்களத்தில் படம் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஆனால் உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்து சர்ப்ரைஸ் கொடுத்தார் மாரி செல்வராஜ். அதன்படி உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வைகைபுயல் வடிவேலு ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் இறுதிக்கட்ட வேலையில் மும்முரமாக உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்தை திரையரங்கிற்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்த்திருக்கும் போதே புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் மாரி செல்வராஜ். ‘வாழை’ என்ற புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படமும் தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் மாமன்னன், வாழை என்று அடுத்தடுத்த வெளியீட்டு தயாராக இருக்கும் மாரி செல்வராஜ் மீண்டும் தனுஷுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டனர். தனுஷ் தயாரிப்பில் 15 வது திரைப்படமாக உருவாக உள்ள இப்படம் வரலாற்று படமாக உருவாக வாய்ப்பு உள்ளது. வாழை, மாமன்னன், துருவ் விக்ரம் புதிய படம் ஆகிய படங்களை முடித்து இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் அகில இந்திய தனுஷ் நண்பர்கள் மன்றம் சார்பில் தென் சென்னை பகுதிகளில் கோடைகால தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டது. இந்த செயல்பாட்டினை இயக்குனர் மாரி செல்வராஜ் திறந்து வைத்தார். பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இச்செயல்பாடு குறித்தும் தனது அடுத்த கட்ட படங்கள் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்தார். அதில் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த கேள்விக்கு,

மனத்தி கணேசன் அப்படிங்கற இந்தியன் கபடி வீரர். அர்ஜீனா விருது வாங்கிய ஒரு வீரர். அவருடைய பயோ பிக் ஆக அந்த படம் உருவாகவுள்ளது. அவர் என்னுடைய உறவினர். நெருக்கமான ஒருத்தர். அவனுடைய கதையை படமாக எடுக்க வேண்டும் அவருடைய வாழ்வியலை மாற்ற வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை எனக்கு.. அந்த படமாக துருவ் விகரம் படம் இருக்கும்.. என்றார் மாரி செல்வராஜ்

மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..