அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் பட்டாஸ் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இது தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் D40 படத்திலும் நடித்து வருகிறார்.தொடர்ந்து மாரி செல்வராஜ்,ராம்குமார் உள்ளிட்டோர் படங்களில் நடிக்கவுள்ளார்.



தனுஷ் நடிக்கும் 44ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு தனுஷ் கதை எழுதுகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தனுஷ் பா பாண்டி,வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.