தன்னுடைய திரை பயணத்தில் 50வது திரைப்படமாக தயாராகும் D50 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டு இருக்கிறார். முதல் முறை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் அதிதி ஆக்சன் படமான கேப்டன் மில்லர் திரைப்படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் மற்றொரு புதிய படத்தில் நடிகர் தனுஷ் நினைவு இருக்கிறார். முன்னதாக கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் D51 படத்தில் அடுத்து தனுஷ் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் விடுதலை பாகம் 2 மற்றும் வாடிவாசல் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் உடன் வடசென்னை 2 படத்திலும் தனுஷ் இணைய இருக்கிறார்.


இந்த வரிசையில் தற்போது தனது 50வது திரைப்படமாக உருவாகும் D50 திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். இயக்குனராக பவர் பாண்டி படத்தை இயக்கிய நடிகர் தனுஷ் தனது 2வது படமாக தற்போது D50 திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த D50 திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக தெரிகிறது. மேலும் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், நித்தியா மேனன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே தனுஷின் சூப்பர் ஹிட்டான முந்தைய படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜிகே ஆகியோர் D50 படத்திலும் பணியாற்றுகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் D50 திரைப்படத்திற்கு இசையமைப்பதாக சில தகவல்கள் வெளி வருகின்றன. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு போஸ்டருடன் D50 படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து கிட்டத்தட்ட 100 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்று இருப்பதாக தெரிகிறது. விரைவில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த D50 படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். கீழ்வானத்தை பார்த்தபடி திரும்பி நிற்கும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகர் தனுஷ், "D50-கீழ்வானம் மிகவும் நெருங்கும் போது , இறுதிக்கட்ட படப்பிடிப்பில்.." என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார் எனவே அடுத்த சில தினங்களில் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர அறிவிப்புகளும் தகவல்களும் அடுத்தடுத்து வரிசையாக வெளிவரும் என தெரிகிறது. நேற்று நடிகர் தனுஷ் வெளியிட்ட அந்த புகைப்படம் மற்றும் பதிவு இதோ…