தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வளர்ந்து தற்போது இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் ஹாலிவுட்லும் முக்கிய நடிகராக தற்போது வலம் வருகிறார். அந்த வகையில் தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக்கும் புதிய திரைப்படங்கள் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதிரடியான பீரியட் திரைப்படமாக தயாராகும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இதனிடையே முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி (SIR).

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படத்திற்கு J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட உள்ளதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், அந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாத்தி படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை ஸ்கந்தா சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழுவினர் ரிலீஸ் தேதி பிப்ரவரி 17 தான் என அதிரடியாக தெரிவித்துள்ளனர்.