அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் 3 அடி நீள மலைப்பாம்பை வைத்திருந்ததாக வெளியான செய்தியையொட்டி வனத்துறை அதிகாரிகள் அஜித் வீட்டில் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து அஜித் தரப்பினரிடம் கேட்ட போது, இச்செய்தி முற்றிலும் தவறானது என்று தெளிவு படுத்தினர். மேலும் எந்த ஒரு வனத்துறை அதிகாரியும் வரவில்லை என்பதையும் உறுதி செய்தனர். இது போன்ற தவறான வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்தவையே.