டெல்லியில் பரிசு தருவதாகக் கூறி சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி குர்கானில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 21 வயதான அருண் சர்மா, லிப்ட் பொறியாளராக பணியாற்றி வருகிறார். குடியிருப்பு வாசிகளிடம் நன்றாகப் பழகி வந்த அருண் சர்மா, அங்குள்ள ஒரு 14 வயது சிறுமியிடமும், அவரது தாயாரிடமும் நன்றாகப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி மாலை லிப்ட் அருகில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட அருண் சர்மா, பரிசுப் பொருள் ஒன்று தருவதாக ஏமாற்றிக் கூறி, அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமியை மிரட்டி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, கருத்தடை மாத்திரையையும், சிறுமியிடம் வலுக்கட்டாயமாகக் கொடுத்துள்ளார். மேலும், இதை யாரிடமாவது சொன்னால், கொலை செய்துவிடுவேன் என்றும் சிறுமியை அவர் கடுமையாக மிரட்டி அனுப்பி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மொட்டை மாடியிலிருந்து நடக்க முடியாமல் அழுதுகொண்டே வந்த சிறுமியைப் பார்த்து பலரும் விசாரித்துள்ளனர். பின்னர், பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், சிறுமியின் தாயாரிடம் சிறுமி நடக்க முடியாமல் நடந்து வருவது குறித்துச் சொல்லி உள்ளனர்.

சிறுமியின் தாயார் விசாரித்தபோது, நடந்ததை எல்லாம் அழுதுகொண்டே சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அருண் சர்மாவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.