விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது ஒளிபரப்பாகி வருகிறது.10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் ஆகியுள்ளது.இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கடந்த சீசனில் wildcard என்ட்ரியாக ரித்திகா இணைந்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்த சீசனிலும் wildcard என்ட்ரி ஆக சில போட்டியாளர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்த சில தகவல்களும் பரவி வருகின்றன.அந்த வரிசையில் யூடியூப் மூலம் பிரபலமாகி தற்போது நடிகையாக அறிமுகமாகியுள்ள தேஜு அஷ்வினி இந்த தொடரில் இணைகிறார் என்று ஒரு தகவல் பரவி வந்தது அதுகுறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு அது வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார் தேஜு அஷ்வினி.