தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சீயான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

முன்னதாக இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ்,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் கோப்ரா படத்தில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கோப்ரா படத்தின் 3-வது பாடலாக உயிர் உருகுதே பாடல் நாளை (ஜூலை 4) வெளியாகவுள்ளது. இந்நிலையில் உயிர் உருகுதே பாடலின் ப்ரோமோ தற்போது வெளியானது. வீடியோ இதோ…