தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் 3-க்கான டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வனிதா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். சேரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது போல் தெரிந்தது. ஆனால் ரசிகர்களின் ஆதரவால் பிக்பாஸ் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டார்.

தற்போது வெளியான ப்ரோமோவில், கவின் லாஸ்லியா காதல் குறித்து விமர்சனம் செய்துள்ளார் சேரன். ரகசிய அறையில் இருந்து சேரன் கடிதம் எழுதியுள்ளார். இதை தர்ஷன் படித்து காண்பிக்கிறார்.

#Day79 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/U612NSoPHU

— Vijay Television (@vijaytelevision) September 10, 2019