சினிமா கண்டெடுத்த சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் SA சந்திரசேகர். கொடி, டிராஃபிக் ராமசாமி போன்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜெய், அதுல்யா, வைபவி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கேப்மாரி எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்ஏசி தெரிவித்திருந்தார். இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டே இப்படம் தயாராவதாக கூறினார்.

இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இளைஞர்களுக்கு பிடித்த வகையில் இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் அனிருத் பாடிய உசுப்பேத்தினா உம்முனு இருக்கனும் எனும் பாடல் சமீபத்தில் வெளியாகியது. தற்போது இப்படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என தெரியவந்தது.