ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் அட்லீ.இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல் என்று பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.



இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடைபோட்டு வருகிறது.இதனையடுத்து இவர் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.



அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்ததாக இயக்கும் படம் குறித்து A5 என்று பதிவிட்டுள்ளார்.இந்த படத்தின் வேலைகளை தற்போது துவங்கியுள்ளார் என்று தெரிகிறது.இவர் அடுத்ததாக ஷாருக் கானை இயக்கவுள்ளார் என்ற தகவலும் இருக்கிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.