அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.நயன்தாரா,கதிர்.இந்துஜா,யோகிபாபு,விவேக் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.இந்த இசை வெளியீட்டு விழாவில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் சிங்கப்பெண்ணெ பாடலை லைவாக பாடினார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.அதனை தொடர்ந்து பேசிய ரஹ்மான் விஜய் எப்போதும் அமைதியாக தான் இருப்பார்,அவரிடம் எனக்கு பிடித்ததே அவருடைய டேக் இட் ஈஸி பாலிசி தான்.வெறித்தனம் போல ஒரு பாடலை தான் ரசிகர்கள் கேட்டார்கள் நேயர் விருப்பம் தான் வெறித்தனம்.பிகில் ஜாலியான,உருக்கமான ஊக்கத்தை தரும் படமாக இருக்கும் என்றும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.