பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார்.

முகென் நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார். தர்ஷன்,கவின்,லாஸ்லியா,சாண்டி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.முதல் ப்ரோமோவில் தர்ஷன் ஷெரினுக்காக பச்சைமிளகாய் சாப்பிட்டார்.

தற்போது இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியா கவினை காப்பாற்ற வேண்டும் என்று பிக்பாஸிடம் கூறுகிறார்.பச்சைமிளகாய் சாப்பிட்டால் கவினை காப்பாற்றலாம் என்று கூற லாஸ்லியா விளையாட்டு தனமாக இருக்கிறார்.கடுப்பான பிக்பாஸ் இது நாமினேஷன் வேலை சீரியசா இருங்க என்று கூறுகிறார்.