இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இந்த 2023 ஆம் ஆண்டில் நடைபெறவருக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கு அழைக்கும் வகையில் கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ வழங்கி இருக்கிறது. மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் அனைத்து ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பக்கா மாஸ் ஆக்சன் படமாக வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. தற்போதைய தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆக மாறி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அந்த வகையில் முதலாவதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக உருவாக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் முக்கியமான கவுரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களை தொடர்ந்து தனது திரைப் பயணத்தில் 170-வது படமாக ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் TJ.ஞானவேல் இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படப்பிடிப்பு மற்றும் இதிர அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஜெயிலர் எனும் மெகா ஹிட் கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தலைவர் 171 படத்தில் கைகோர்க்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி தலைவர் 171 படத்தில் இணைகிறது. இப்படத்திற்கும் அனிருத் இசை அமைக்கிறார். இது குறித்த இதர தகவல்கள் அநேகமாக லியோ திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளியாகலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிசிசிஐ மிகப்பெரிய அழைப்பு விடுத்திருக்கிறது.

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கான 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் அக்டோபர் 5-லிருந்து நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிசிசிஐ அதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி இருக்கிறது. பிசிசிஐயின் செயலாளர் ஜே ஷா, ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து இந்த கோல்டன் டிக்கெட்டை வழங்கி இருக்கிறார். இது குறித்து பிசிசிஐ தனது X பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிசிசிஐயின் செயலாளர் ஜே ஷா கோல்டன் டிக்கெட் வழங்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த புகைப்படம் மற்றும் பதிவு இதோ...