குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தனக்கென தனி பாணியில் வில்லன் நடிகராக மக்களிடையே மிக பிரபலம் அடைந்தவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பல முக்கிய கலைஞர்களுக்கு மத்தியில் மிக முக்கிய நடிகராக கவனம் ஈர்த்த நடிகர் பப்லு பிருத்திவிராஜ் அஜித்குமாரின் அவள் வருவாளா திரைப்படத்தில் வித்தியாசமான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள மொழி தமிழ் மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகராக திகழும் பப்லு பிரித்திவிராஜ் சின்னத்திரையிலும் பல மெகா சீரியல்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் இப்போது வரை தொடர்ச்சியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற சிறப்பு ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பப்லு பிரித்திவி ராஜ் நம்மோடு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், நீங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தீர்கள் உங்களுடைய முதல் திருமணத்தை பெற்றோர்களோடு சண்டை போட்டு நடத்தினோம் என சொன்னீர்கள்... அந்த திருமணம் வெற்றிகரமாக இல்லை என எப்போதாவது வருந்திது உண்டா? எனக் கேட்டபோது, “நான் பள்ளியில் படிக்கும்போது நான்காம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை ஒரு பெண்ணை காதலித்தேன் அந்தப் பெண்ணையே நான் திருமணம் செய்து இருந்தால் எனக்கு அதுவே உலகமாக இருந்திருக்கும். பிறகு நான் பீணாவை சந்தித்தேன். சினிமாக்காரர்களை பொருத்தவரை மற்றவர்கள் மனதில் சினிமாக்காரர்கள் என்றாலே பொம்பள பொறுக்கி பொம்பள ஆசை உள்ளவர்கள் பொம்பள சோக்கு உள்ளவர்கள் என ஒரு உருவகப்படுத்தி இருக்கிறார்கள் அல்லவா அது நான் அல்ல. நான் ஒரு குடும்பஸ்தன். எனக்கு ஒருத்தரை காதலிக்க வேண்டும் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் குடும்ப வாழ்க்கையில் இருக்க வேண்டும்.

நான் பீனாவை காதலித்தேன். அவர் எனது சிறந்த தோழியாக இருந்தார். காதலித்தேன். அவர்களது பெற்றோர்கள் எதிராக நின்றார்கள் என்னுடைய பெற்றோர்களும் எதிராக நின்றார்கள் என்னுடைய அம்மா இப்போது வரை ஏற்றுக் கொள்ளவில்லை. இவை எல்லாவற்றையும் எதிர்த்து நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அது சரியாக அமையவில்லை. அதற்கான வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.” என பிரித்திவி ராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். இன்னும் பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் பப்லு ப்ரித்திவி ராஜின் அந்த முழு பேட்டி இதோ…