தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீக்கு அழகிய ஆண் குழந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிறந்தது. இதனை அடுத்து தற்போது தங்களது செல்ல மகனுக்கு இருவரும் பெயர் சூட்டியுள்ளனர். முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் அட்லீ, ஆர்யா - நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ராஜா ராணி திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயுடன் கைகோர்த்த ஆற்றி அடுத்தடுத்து தெறி மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். தளபதி விஜயை வைத்து மெகா ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனராக உயர்ந்த அட்லீ தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அந்த வகையில் தனது முதல் ஹிந்தி திரைப்படமாக இயக்குனர் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக ஷாரூக் கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸாகி உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் டங்கி படத்தில் ஷாரூக் கான் நடித்து வருகிறார். ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கானுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஜவான் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் தளபதி விஜய் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகையான ப்ரியாவை இயக்குனர் அட்லீ காதல் திருமணம் செய்து கொண்டார். முன்னதாக சில மாதங்களுக்கு முன் இயக்குனர் அட்லீ மற்றும் ப்ரியா இருவரும் விரைவில் பெற்றோர்கள் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தொடர்ந்து தங்களது இந்த கர்ப்ப காலத்தின் அழகிய நினைவுகளை அட்டகாசமாக போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை இயக்குனர் அட்லி மற்றும் பிரியா பகிர்ந்து வந்தனர். தொடர்ந்து சமீபத்தில் இருவருக்கும் அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் தங்களது செல்ல மகனுக்கு மீர் என பெயரிட்டுள்ளதாக பிரியா அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் அட்லீ மற்றும் பிரியாவுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது செல்ல மகனோடு இருக்கும் புகைப்படத்தை இன்ஸாடாகிராமில் பதிவிட்டு ப்ரியா அடலீ இதை தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…