100 படத்தின் வெற்றியை தொடர்ந்து அதர்வா தன்னை வைத்து பூமராங் படத்தை இயக்கிய கண்ணனுடன் இணைகிறார்.இந்த படத்தையும் இயக்குனர் கண்ணன் தயாரிக்கிறார்.இந்த படத்தில் பிரேமம்,கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார்.



அதர்வா-அனுபமா கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான நின்னு கோரி படத்தின் ரீமேக் என தகவல் கிடைத்துள்ளது.தெலுங்கில் நானி-நிவேதா தாமஸ் நடித்த வேடங்களில் அதர்வா மற்றும் அனுபமா தமிழில் நடிக்கின்றனர்.



இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.Azerbaijan-ல் அடுத்ததாக 15 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இத்துடன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடையும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.