100 படத்தின் வெற்றியை தொடர்ந்து அதர்வா தன்னை வைத்து பூமராங் படத்தை இயக்கிய கண்ணனுடன் இணைகிறார்.இந்த படத்தையும் இயக்குனர் கண்ணன் தயாரிக்கிறார்.இந்த படத்தில் பிரேமம்,கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார்.



அதர்வா-அனுபமா கூட்டணியில் உருவாகவுள்ள இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான நின்னு கோரி படத்தின் ரீமேக் என தகவல் கிடைத்துள்ளது.தெலுங்கில் நானி-நிவேதா தாமஸ் நடித்த வேடங்களில் அதர்வா மற்றும் அனுபமா தமிழில் நடிக்கின்றனர்.



இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Happy to Announce that our final schedule with Atharvaa and Anupama has started to roll! More surprising updates are coming your way! Stay tuned!@Atharvaamurali @anupamahere @DoneChannel1 @KabilanVai @masalapixweb @mkrpproductions ✌️👍 pic.twitter.com/Z6BkKjpTcc

— kannan (@Dir_kannanR) November 24, 2019