குழந்தை நட்சத்திரமாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக கலக்கி வருபவர் அஷ்ரிதா ஸ்ரீதாஸ்.பெற்றோர்கள் சினிமா துறையில் இருக்க சில படங்கள் மற்றும் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பை பெற்று அதில் அசத்தவும் செய்தார் அஷ்ரிதா.

அப்பா அம்மா என்ற தமிழ் சீரியல் மூலம் நடிகை அவதாரம் எடுத்த இவர் அடுத்ததாக விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்க்க தொடங்கினார் அஷ்ரிதா.இதனை அடுத்து சொந்த பந்தம்,கல்யாண பரிசு 2,இளவரசி,நிறம் மாறாத பூக்கள் என பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவராக மாறினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1,தேன்மொழி BA , சன் டிவியின் மகராசி போன்ற தொடர்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் அஷ்ரிதா ஸ்ரீதாஸ்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது இவர் நடிக்கும் முக்கிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் தொடர் பாக்கியலக்ஷ்மி.இந்த தொடரில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் புது என்ட்ரியாக இணைந்துள்ளார் அஷ்ரிதா.இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.