தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது.மாஃபியா,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 30 போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இவரது மாஃபியா படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அருண் விஜய் 30 படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஈரம்,குற்றம் 23,வல்லினம்,ஆறாது சினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.