தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,பார்டர்,யானை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.பார்டர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பார்டர் படத்தை ஈரம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.இந்த படம் வரும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் தேசிய உணர்வுடைய பாடல் ஒன்றை ரெகார்ட் செய்துள்ளதாக இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Recorded a beautiful patriotic song #தாய்மண்ணே for the movie #ArunVijayInBorrder & very excited to present it u soon..!!

Tnkq @TherukuralArivu bro for the wonderful effort 🤗@arunvijayno1 @dirarivazhagan @ReginaCassandra @StefyPatel@SamCSmusic @DopRajasekarB @All_In_Pictures pic.twitter.com/BqQHH8spvP

— 𝐒𝐀𝐌 𝐂 𝐒 (@SamCSmusic) November 7, 2021