தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது.மாஃபியா,பாக்ஸர்,அக்னி சிறகுகள் ,சினம் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதனை தொடர்ந்து அருண் விஜய் ஈரம்,குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகனுடன் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தை All In Pictures நிறுவனம் தயாரித்துள்ளனர்.அருண் விஜய் 31 என்று தற்காலிகமாக இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.இதில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

#AV31 Mission Started With Pooja Today. @arunvijayno1 @ReginaCassandra @dirarivazhagan @stefyPatel #VijayaRaghavendra @All_In_Pictures @SamCSmusic @RogerSatinwhite @editorsabu @SaktheeArtDir @reddotdzign1 @DoneChannel1 @shiyamjack pic.twitter.com/eo27YBeF5B

— Yuvraaj (@proyuvraaj) December 9, 2019