இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் லியோ திரைப்படத்தில் குறிப்பிடப்படும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தன் கேரக்டர் குறித்து குறித்த முக்கிய தகவலை இயக்குனர் அனுராக் கட்சியப் பகிர்ந்து கொண்டார். முதல் அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே பெரிய ஹைப்பை ஏற்படுத்திய படமான இந்த லியோ திரைப்படம் நாளுக்கு நாள் இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் இன்று அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆனது. மாஸ்டர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவந்துள்ள இந்த லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாஃபர் சாதிக், மாயா கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ரிலீசுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவில் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்திருக்கும் லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒரு முறை இயக்குனர் அனுராக் கஷ்யப் அவர்கள் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் இயக்குனராகவும் நடிகராகவும் திகழும் அனுராக் கஷ்யப் அவர்கள் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் மிரட்டலான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்த வரிசையில் தனது அடுத்த தமிழ் படமாக தற்போது தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் குறிப்பிடப்படும் முக்கிய கௌரவ வேடத்தில் இயக்குனர் அனுராக் கஷ்யப் நடித்திருக்கிறார். இன்று அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகம் எங்கும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த சூழலில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்காக பிரத்யேக பேட்டி கொடுத்த இயக்குனர் அனுராக் கஷ்யப் அவர்கள், பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது உங்களை எப்படி பார்த்துக் கொண்டார்கள்?” எனக் கேட்டபோது, “என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள்” என பதில் அளித்தார். தொடர்ந்து அவரிடம் “லியோ படத்தில் உங்களது கதாபாத்திரம் நிறைய இருந்தது அதை எடிட் செய்து இவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்று நாங்கள் நினைத்தோம்?” என்று சொன்னபோது, “இல்லை அந்த கதாபாத்திரம் அவ்வளவு தான் இருந்தது” என்று இயக்குனர் அனுராக் கஷ்யப் தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் இயக்குனர் அனுராக் கஷ்யப் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்க் காணலாம்.