விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது.ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்தார் ஆல்யா.ஒரு சிறிய இடைவேளைக்கு பின் ராஜா ராணி 2 தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.இந்த தொடரில் சித்து ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி தொடரில் நடித்து வந்தார் அந்த தொடர் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.இதனை தொடர்ந்து சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பை தொடங்கியுள்ள கயல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்பமாக இருந்தார்,அப்போதும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார் ஆலியா, சமீபத்தில் தொடரில் இருந்து விலகினார்.இவர் தற்காலிகமாக தான் விலகியுள்ளார் என்று சில தகவல்கள் வெளியாகி வந்தன.இவருக்கு சில தினங்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

சீரியலில் ஆல்யாவிற்கு பதிலாக ரியா தற்போது நடித்து வருகிறார்.இவர் திரும்பி சீரியலுக்கு வருவாரா இல்லையா என ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.அதற்கு பதிலளித்த ஆல்யா இனி ராஜா ராணி தொடரில் வரமாட்டேன் என்றும் புதிய சீரியலில் விரைவில் ரீ என்ட்ரி தருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.