தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அல்லு அர்ஜுன். கடந்த 2003 ல் தெலுங்கு மொழியில் வெளியான கங்கோத்ரி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அல்லு அர்ஜுன். முதல் படத்திலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அல்லு அர்ஜுன் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன்படி ஆர்யா, வேதம், பத்ரி நாத், டிஜே, ருத்ரமாதேவி, நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா, அலா வைகுண்டபுரமுலு ஆகிய திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. இவர் நடிப்பில் கடந்த 2020 ல் வெளியான ‘அலா வைகுண்டபுரம்’ திரைப்படமுலு’ திரைப்படம் அல்லு அர்ஜுனுக்கு இந்த அளவு வெற்றியை பெற்று தந்தது. இவரது திரைப்பயனத்தின் உச்சகட்ட திருப்புமுனையாக வெளியான திரைப்படம் புஷ்பா. கடந்த 2021 இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் மாறுபட்ட தோற்றத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மட்டுமல்லாமல் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தது. மிகப்பெரிய வெற்றியையடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் புகழ் மிகப்பெரிய அளவு வளர்ந்தது. தற்போது இமாலய வெற்றி பெற்ற புஷ்பா தி ரைஸ் படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா தி ரூல்’ படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட திரட்ஸ் என்ற வலை தள பக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். முகநூல் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பார்க் புதிய கண்டுபிடிப்பு தளமான திரெட்ஸ் தளத்தில் ஒரு மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். இதில் வியப்பில் ஆழ்த்தும் விஷயம் என்னவென்றால் திரெட்ஸ் கணக்கை திறந்து அவர் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே பகிர்ந்துள்ளார் என்பது தான். அதன்படி அவரது ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து தற்போது 1 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற இந்தியாவின் முதல் நடிகர் என்ற வரலாற்றை பெற்றுள்ளார். முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிவிரைவில் 20 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற தென்னிந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றவர் அல்லு அர்ஜுன்.