கடந்த 2004 தெலுங்கு திரையுலகில் ஜெய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நவ்தீப். அதை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் கடந்த 2005 ல் தமிழில் வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் நவ்தீப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அதை தொடர்ந்து தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து குறிப்பிடப்படும் முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்தார். அதன்படி தமிழில் நெஞ்சில், அ ஆ இ ஈ, சொல்ல சொல்ல இனிக்கும், இது என்ன மாயம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக அஜித் நடிப்பில் கடந்த 2008 ல் வெளியான ஏகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நவ்தீப் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி பல முக்கிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் ‘சீறு’ இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா ந நடிப்பில் வெளியான இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் நவ்தீப் நடித்திருப்பார். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். மேலும் தெலுங்கில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று நான்காவது இடம் பிடித்திருப்பார். அதை தொடர்ந்து தற்போது தமிழில் இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ‘லவ் மவுலி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ரசிகர்களின் கவனத்தை படத்திற்கு படம் கவர்ந்து பேசப்பட்டு வரும் நவ்தீப் தற்போது காலில் அடிபட்ட நிலையில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பிரபல தெலுங்கு நடிகை தேஜஸ்வினி நலம் விசாரிக்க நவ்தீப் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அங்கு காலில் அடிப்பட்டு இருக்கும் நடிகர் நவ்தீப் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

பின்னர் வீடியோ பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் என்ன நேர்ந்தது.. நலமா உள்ளாரா? என்று வீடியோவின் கீழ் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அதனுடன் விரைவில் நவ்தீப் குணமடைய ஆறுதல் வார்த்தைகளையும் ரசிகர்கள், திரைபிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.