பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று ஆறாம் நாளான இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார். இன்பதிர்ச்சி தந்த ஐஸ்வர்யாவை வீட்டில் உள்ளோர் வரவேற்றனர். பின் லாஸ்லியா மற்றும் ஷெரினுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார்.

கண்ணீர் கடலில் தவிக்கும் லாஸ்லியாவிற்கு இனி ஆறுதல் அவரது டாஸ்க் கவனமே. இன்னும் ஒரு வாரமே உள்ளதால் யார் டைட்டிலை பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திரை பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவது இரண்டாம் சீசனில் இருந்து ஆரம்பமானது. சில தினங்களுக்கு முன் நடிகர் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் வந்தனர்.