தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.அடுத்ததாக சகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம்,யசோதா,விஜய் தேவர்கொண்டாவுடன் VD 11 என பிஸியாக உள்ளார் சமந்தா.

இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா,இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.இவற்றை தவிர இவர் ஒரு ஆங்கில படத்திலும் நடிக்கினார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.அடுத்தடுத்து படங்களில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சமந்தா மாறியுள்ளார்.

சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார் அதில் என்னுடைய அமைதியை அறியாமை என்றும்,என்னுடைய பொறுமையை ஏற்றுக்கொள்வதாகவும்,என்னுடைய என்னுடைய இரக்கத்தை பலவீனம் எனவும் எடுத்துக்கொள்ள வேண்டாம் , இரக்கத்திற்கும் ஒரு எல்லை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.இது தனக்கு நெருக்கமான யாருக்கோ ஒரு பதிலாக அவர் தெரிவித்துள்ளார்,இந்த பதில் யாருக்கு என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Don't ever mistake
MY SILENCE
for ignorance,
MY CALMNESS
for acceptance,
My
KINDNESS
for weakness.

— Samantha (@Samanthaprabhu2) April 22, 2022