மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாக அதன் அனுபவங்கள் குறித்தும் மார்க் ஆண்டனி படம் குறித்தும் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர்கள் விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முனனணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் தான் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் கான்செப்ட்டை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக வரும் மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விஷால் மற்றும் SJ.சூர்யா உடன் இணைந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகையாக கொடிகட்டி பறந்த சில்க் ஸ்மிதாவை நடிக்க வைத்திருக்கின்றனர். ஆம், சில்க் ஸ்மிதாவின் உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நடிகையை நடிக்க வைத்து CGI முறையில் சில்க் ஸ்மிதாவை பட குழுவினர் கொண்டு வந்திருக்கின்றனர்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நாளை (செப்டம்பர் 15ஆம் தேதி) விநாயகர் சதுர்த்தி வெளியீடாக மார்க் ஆண்டனி படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரைலர் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். அனைத்து கமர்சியல் அம்சங்களும் நிறைந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ரிலீஸில் இடையில் ஒரு சிக்கல் இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் அந்த தடைகள் அனைத்தும் நீங்கி நாளை ரசிகர்களுக்கு விருந்தாக மார்க் ஆண்டனி ரிலீஸாக காத்திருக்கிறது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாக நடிகர் விஷால் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில்,

“கடந்த ஒரு வருடமாக அனைத்து கடின உழைப்பு ரத்தம் வேர்வை வலி காயங்கள் மற்றும் மரணத்திற்கு அருகே சென்ற அனுபவங்கள்.. எனக்கு மட்டுமல்ல மார்க் ஆண்டனி உலகத்தை சார்ந்த எங்களது அணியில் இருக்கும் அனைவருக்கும்... நாங்கள் செப்டம்பர் 15ஆம் தேதியை நெருங்கிவிட்டோம். முற்றிலும் மாறுபட்ட டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக நாளை முதல் உலகெங்கும் திரையரங்குகளில் மார்க் ஆண்டனி ரிலீஸ் ஆகிறது.

நான் எப்போதும் இரண்டு கடவுள்களை நம்புகிறேன் ஒன்று நான் இப்போது சென்று என்னையே சரணடைந்து ஆசி பெற்று வந்த திருப்பதி ஏழுமலையான் மற்றொன்று நேரம். மேலும் கடந்த 19 ஆண்டுகளாக என்னுடைய திரைப் பயணத்தை ஊக்கமளித்து திரையரங்குகளில் என்னை ஆசிர்வதித்தவர்கள்.

நான் நிச்சயமாக சொல்கிறேன் கடினமாக உழைத்து பணத்தை செலவழித்து நாளை மார்க் ஆண்டனி படம் பார்க்கும் அனைவருக்கும் மார்க் ஆண்டனி படம் நாளை திருப்திகரமாக இருக்கும். நாளையிலிருந்து ஷோ ஆரம்பம்.. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.”

என தெரிவித்திருக்கிறார். நடிகர் விஷாலின் அந்தப் பதிவு இதோ…