தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராய் வலம் வருபவர் நடிகர் சர்வானந்த் . 'ஐதோ தேரீக்கு' படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் சர்வானந்த் . பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமுக் பாக்ஸ் ஆபீஸில் ஈடுபடமால் போக இடையே சில படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். இவருக்கு கடந்த 2010 ல் வெளியான பிரஸ்தானம் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்து அவரது திரைப்பயணதிற்கு கை கொடுத்தது. பின் சர்வானந்த், கம்யம், பிரஸ்தானம, ரன் ராஜா ரன், மல்லி மல்ல்லி இடி ராணி ரோஜு போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் நடிகர் சர்வானந்த் . தெலுங்கு சினிமாவி மட்டுமல்லாமல் தமிழில் காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே, ஜேகே எனும் நண்பன் ஆகிய படங்களிலும் நடித்தார். இவருக்கு தமிழில் எங்கேயும் எப்போதும் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. இயக்குனர் எம். சரவணன் இயக்கத்தில் உருவான இப்படம் சர்வானந்த் அவருக்கு தமிழில் நல்ல ஒப்பனிங் ஆக அமைந்தது. பின் தொடர்ந்து சர்வானந்த் அவர்களுக்கு தமிழில் வாய்ப்பு வந்தும் அவர் தெலுங்கு துறையில் பிஸியாக இருந்ததால் தமிழில் பெரிதாக படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் கணம் என்ற பெயரில் தமிழிலும் ஒகே ஒக்க ஜீவிதம் என்று தெலுங்கிலும் பைளிங்குவல் திரைப்படமாக வெளியாகி நல்ல வரவேற்பை இவருக்கு கொடுத்தது. தற்போது இவர் #Sharwa35 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு தமிழில் ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற நடிகர் சர்வானந்த் ததற்போது அவரது காதலியை கரம்பிடிக்க இருக்கிறார். அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார் நடிகர் சர்வானந்த் . இவருக்கும் ரக்ஷிதா ரெட்டிக்கும் பெற்றோர் அனுமதியுடன் கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுடன் நடைபெற்ற நிச்சயத்தார்த்ததில் நடிகர்கள் சிரஞ்சீவி, நாகர்ஜுனா, அமலா, ரானா டகுபதி, நித்தின், எஸ் எஸ் கார்த்திகேயா, சித்தார்த், அதிதி ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் அப்போது வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் ஜூன் 3 ம் தேதி இருவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள லீலா பேலஸில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண நாளையொட்டி இரண்டு நாட்கள் பிரம்மாண்டமாக இந்த திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் நடிகர் சர்வானந்த் அவர்களின் திருமண வாழ்விற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.