தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.20 வருடங்களாக வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து,தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.கடைசியாக இவர் ஹீரோவாக நடித்த மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2023 கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை தவிர இவர் நடித்துள்ள அகிலன் படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை அடுத்து அஹ்மத் இயக்கத்தில் ஜனகனமன,சைரன்,JR 28 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

JR 28 படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வந்தார் ஜெயம் ரவி.மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்காக பல பாராட்டுகளையும் அள்ளி வந்தார்.தற்போது தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.

உடனடியாக தன்னை தனிமை படுத்திகொண்டு தக்க சிகிச்சை எடுத்து வருவதாகவும் , தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் டெஸ்ட் எடுத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.அனைவரயும் கவனமாக இருக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Earlier this evening I tested positive for Covid-19. Following all protocols, I have immediately isolated myself. I sincerely request all those that have come in contact with me to get themselves tested if necessary. Mask up. Stay safe! God bless.

— Jayam Ravi (@actor_jayamravi) October 21, 2022