சம கால இயக்குனர்களில் நேர்த்தியான திரைக்கதையும் வடிவமைப்பையும் கொடுத்து ரசிகர்களை விரைவில் கவர்ந்த திறமையான இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஒரு மிகப்பெரிய நட்சத்திற்கு இருக்குமளவு ரசிகர் பட்டாளம் லோகேஷ் கனகராஜ்க்கு தற்போது உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அட்டகாசமான ஆக்ஷன் கதைகளை கொடுத்து ரசிகர்களை பரவலாக கவர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து ‘லியோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார்கள்/ அட்டகாசமான ஆக்ஷன் திரில்லர் காட்சிகளுடன் லியோ திரைப்படம் தற்போது காஷ்மீர் பகுதிகளில் படமாக்கபட்டு வருகிறது. இதற்காக இரண்டு தனி விமானம் வைத்து படக்குழுவினரை அழைத்து சென்றுள்ளனர்.

செவன் ஸ்க்ரீன் தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜயுடன் இனைந்து த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே சென்னையில் சில காட்சிகள் படமாக்கபட்டதையடுத்து இறுதிகட்ட படப்பிடிப்பை நோக்கி தற்போது லியோ படக்குழு நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி நடித்து வரும் மார்ச் 10 வெளியாகவிருக்கும் திரைப்படமான ‘அகிலன் திரைப்படம் குறித்து இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதில் அகிலன் படப்பிடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்தித்த புகைப்படம் வைரலாகி இதனையடுத்து ரசிகர்கள் ஜெயம் ரவி தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் வலைதளங்களில் சமீபத்தில் பேச தொடங்கினர். இது குறித்து ஜெயம் ரவியிடம் கேட்கையில்,

“லோகேஷ் மாநகரம் முடிச்சிட்டு என்னிடம் கதை சொன்னார். சில விஷயங்களால அதை பண்ண முடியல.. இந்த புகைப்படம் அகிலன் படப்படிப்பில் தான் எடுத்தோம். அவரும் அப்போது விக்ரம் படப்பிடிப்பிற்காக வந்திருந்தார். அந்த நேரத்தில் ஒரே இடத்துல படம் எடுத்ததால் இந்த சந்திப்பு நடந்தது. அவர் பிரமாதமான இயக்குனர், அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.” என்றார்.

மேலும் மற்ற ஹீரோ படங்களில் சிறப்பு தோற்றத்தில் ஜெயம் ரவி நடிப்பாரா என்ற கேள்விக்கு, "கதாபாத்திரத்திரம் நல்லா இருந்தா பண்ணுவேன். ஏனென்றால் என் படமே பார்த்து பார்த்து பன்றேன்.‌ அப்படி கூப்டும் போது படத்தில் எதாவது ஒன்னு நமக்குனு இருக்கனும்ல.. அப்படி இருந்தா கண்டிப்பா பண்ணுவேன். அதில் எந்தவொரு தயக்கமும் இல்லை.." என்றார்.

மேலும் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்மான தகவல் இதோ..