தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது மொழிகளைக் கடந்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனது கடின உழைப்பாலும் தேர்ந்த நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்துள்ள நடிகர் தனுஷ், நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக திரையுலகில் வலம் வருகிறார்.

கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார் தனுஷ். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா & லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் இயக்குனராக 3 மற்றும் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ள ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் தம்பதியினர் தற்போது விவாகரத்தை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தற்போது சினிமா ரசிகர்கள் & திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்து அறிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோர்களாக நலம் விரும்பிகளாக வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்து பயணித்துகொண்டிருந்தோம். இன்று இருவரும் நமக்கேற்ற பாதைகளை தேர்ந்தெடுத்து பிரிந்து நிற்கிறோம்.
நானும் ஐஸ்வர்யாவும் தம்பதியாக தனிப்பட்ட முறையில் பிரிந்து செல்ல முடிவு எடுத்துள்ளோம்.
எனவே எங்களது முடிவுக்கு மதிப்பளித்து புரிந்து கொண்டு எங்களுக்கு தேவையான தனிமையை கொடுங்கள் .

என தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் அந்த பதிவு இதோ…


OM NAMASHIVAAYA 🙏🙏🙏 pic.twitter.com/XXFo8BDRIO

— Dhanush (@dhanushkraja) March 23, 2021

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush)