12 வயது சிறுமி திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அந்த வீடியோவை ஆபாச தளத்தில் வெளியிட முயன்ற கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் கொச்சி வடுதலா பகுதியில் பிபின் என்ற 25 வயது இளைஞரும், அவரது மனைவி 19 வயதான வர்ஷாவும் ஒன்றாகச் சேர்ந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களது ஓட்டலில் 19 வயதான லிதின் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார்.

பிபின் குடியிருக்கும் வீட்டு மாடியில் ஒரு குடும்பத்தினர் தங்கி உள்ளனர். அவர்களுக்கு 12 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், பிபின் வீட்டிற்கு லிதின் அடிக்கடி வரும்போது, அந்த 12 வயது சிறுமியிடம் பழகி உள்ளார். மேலும், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரை காதலிப்பதாக நம்ப வைத்து, பலமுறை அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த தகவல் ஓட்டல் உரிமையாளரான பிபின் மற்றும் அவரது மனைவி வர்ஷாவிற்கு தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதை, வீடியோ எடுத்து, ஆபாச தளத்தில் வெளியிட்டு, பணம் சம்பாதிக்கக் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து திட்டம் போட்டுள்ளனர்.

அதன்படி, லிதின் சிறுமியை மீண்டும் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் பலாத்காரம் செய்யும்போது, அதைக் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து மறைந்திருந்து தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர், அந்த மாணவியை அழைத்து, “உன்னுடைய ஆபாச வீடியோ எங்களிடம் இருக்கிறது. நாங்கள் சொல்வதைப்போல் கேள்” என்று கூறி, அந்த சிறுமியை நிர்வாணமாக நிற்க வைத்து மீண்டும் வீடியோ எடுத்துள்ளனர்.

இதில், பயந்துபோன சிறுமி அழுதுகொண்டே, நடந்ததையெல்லாம் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பிபின், அவரது மனைவி வர்ஷா மற்றும் லிதின் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 6 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை, கணவன் - மனைவி சேர்ந்து ஆபாசப் படம் எடுத்து, ஆபாச தளத்தில் வெளியிட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.